குதப்புணர்ச்சிக்குப்பின் அன்வார் வீட்டில் சைபுல் இருந்தது ஏன்

குதப்புணர்ச்சிக்குப்பின் அன்வார் வீட்டில் சைபுல் இருந்தது ஏன்

Anwar-dan-Saifu

அக்டோபர் 29, குதப்புணர்ச்சி குற்றச்சாட்டை அன்வார் மீது சுமத்தியதற்குப் பிறகு அன்வார் வீட்டில் சைபுல் இருப்பதை காட்டும் புகைப்படம் சைபுல் எப்படிப்பட்ட மனப் போக்குள்ளவர் என்பதை காட்டும் சான்றாகும் என அன்வாரின் தலைமை வழக்கறிஞர் டத்தோ ஸ்ரீ கோபால் ஸ்ரீ ராம் தனது வாதத் தொகுப்பில் தெரிவித்தார்.

 

சைபுல் நம்பத்தக்க சாட்சி அல்ல என்பதை நிலை நிறுத்துவதற்கு அன்வார் தரப்பு வழக்கறிஞர் குழுவுக்கு தலைமை தாங்கும் ஸ்ரீ கோபால் ஸ்ரீ ராம் புகைப்படத்தை எடுத்து காட்டினார்.