நடிகர் எஸ்.எஸ்.ஆர். உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி: பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்

நடிகர் எஸ்.எஸ்.ஆர். உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி: பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்

24

அக்டோபர், 25  பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் (வயது 86) உடல்நலக் குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார். அவரது உடல் தேனாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன், இளங்கோவன், தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பல்வேறு தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், உற்றார்-உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மகன்கள் இறுதிச்சடங்குகளை செய்தபின்னர், எஸ்.எஸ்.ஆர். உடல் தகனம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.