ஐ.எஸ்.ஐ.எஸ், அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்

ஐ.எஸ்.ஐ.எஸ், அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்

isis

இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா ஆகிய 2 தீவிரவாத இயக்கங்களும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன. அவர்கள் கோவா போன்ற சுற்றுலாதலங்கள், பெங்களூர் போன்ற பெருநகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகளான லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, இந்தியன் முஜாகிதீன் போன்ற இயக்கங்களுடன் கூட்டு சேர்ந்து தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். ஒரே நேரத்தில் இந்தியாவின் பல நகரங்களில் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படலாம்.

அந்த தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவில் தங்கள் அமைப்பை உருவாக்க நினைக்கின்றன. இதற்காக ஆட்களையும் அவர்கள் தேர்வு செய்து வருகிறார்கள். ஈராக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. தீவிரவாதிகள் ஒருவேளை அவ்வாறு பலமுனை தாக்குதல் நடத்தினால், அதற்கு நாங்கள் பல நகரங்களில் பலமுனை தாக்குதல்களை எதிர்கொள்ள தயாராக வேண்டும். அதற்கான தயார்படுத்தும் நடவடிக்கைகளில் நாங்கள் இறங்கி உள்ளோம்.