ஈசிஆரில் விஜய் படத்துக்காக பிரம்மாண்ட உருவாகும் அரண்மனை.

ஈசிஆரில் விஜய் படத்துக்காக பிரம்மாண்ட உருவாகும் அரண்மனை.

Thuppaki Movie Unseen Stills

சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்க ஏற்கெனவே விஜய் ஒப்பந்தமாகியிருந்தார். கத்தி படம் வெளியாகும் முன்பே படப்பிடிப்பை தொடங்கிவிடுவார்கள் என எதிர்பார்த்திருந்த  நிலையில், கத்தி படம் வெளியான பிறகே சிம்புதேவன் படத்தில் நடிப்பதாக விஜய் அறிவித்தார். இதையடுத்து, தீபாவளிக்கு பிறகு இப்படத்தை தொடங்க சிம்பு தேவன் முடிவு  செய்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை காட்டுப் பகுதிக்குள் படமாக்க முடிவு செய்துள்ளனர். மேலும், இப்படத்தில் முக்கிய காட்சியொன்றில் பிரம்மாண்ட அரண்மனையும் இடம்பெறப் போகிறதாம். இதற்காக, சென்னை ஈசிஆரில் கோவளம் அருகில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட அரண்மனை  மற்றும் தர்பார் செட்டை உருவாக்கி வருகிறார்களாம். தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், தீபாவளிக்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்பதால் அரண்மனை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார் சிம்புதேவன்.