இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் இணைந்து உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை தயாரிக்கிறது

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் இணைந்து உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை தயாரிக்கிறது

telescope

சமீபத்தில் இந்தியா வெற்றிகரமாக செவ்வாயில் மங்கள்யான் நிறுவி உலக அரங்கில் சாதனை படைத்தது. தற்போது மற்றுமொரு சாதனை முயற்சியாக உலகின் மிகபெரிய தொலைநோக்கி தயாரிப்பில் இணைந்துள்ளது. இந்தியா,அமெரிக்கா, கனடா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் அமெரிக்காவில் 30 மீட்டர் விண்வெளி தொலைநோக்கி அமைக்கும் திட்டம் இன்று தொடங்குகிறது. இது உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாக அமையும்.

மொத்தம் சுமார் ரூ.9,000 கோடி செலவில் அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள மெளனா கியா என்ற இடத்தில் பிரம்மாண்டமான அந்தத் தொலைநோக்கி நிறுவப்படுகிறது. 2022 மார்ச் மாதம் இப்பணியை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

5 நாடுகளின் 100 விஞ்ஞானிகள், அதிகாரிகள் பணியாற்றி 4012 மீட்டர் உயரத்தில் அமைய உள்ள இந்த தொலைநோக்கி அமைப்பதற்கான செலவை 5 நாடுகளும் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சிக்காக ஆண்டுக்கு 30 இரவுகளுக்கு அந்தத் தொலைநோக்கியை இந்திய விஞ்ஞானிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.