ஜெயலலிதா ஜாமீன் மனுவை முதல் மனுவாக விசாரிக்க மறுப்பு

ஜெயலலிதா ஜாமீன் மனுவை முதல் மனுவாக விசாரிக்க மறுப்பு

download (6)

பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு விசாரணையை முதல் மனுவாக விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராகி ஜெயலலிதா மனுவை அவசர மனுவாக கருதி உடனே விசாரிக்குமாறு கோரிக்கை விடுத்தார். வரிசைப்படியே ஜெயலலிதா மனு விசாரிக்கப்படும் என்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 73வது வழக்காக ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மனு மீது சற்று நேரத்தில் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.