என் தமிழ்

அமெரிக்கா-இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றுபட வேண்டும் : ஈரான் தலைவர் மொஜ்தபா காமேனி அழைப்பு

தெஹ்ரான், 01 செப்டம்பர் 2026 : அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம் நாடுகள் தங்களின் எதிரிகளை அடையாளம் கண்டு, அவர்களின் திட்டங்களைப் புரிந்துகொண்டு எதிர்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மதத் தலைவர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இஸ்லாமிய நாடுகளின் எதிரிகள் என்றும், அவற்றுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலில் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

Scroll to Top