என் தமிழ்

ஓணம் பண்டிகை: மலையாள சமூகத்தினருக்கு லோகா பாலா மோகன் வாழ்த்து

26 ஆகஸ்ட் 2026 : பிபிபி தலைவர் டத்தோ டாக்டர் லோகா பாலா மோகன், மலையாள சமூகத்தினருக்கும் ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஓணம் ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி மற்றும் ஒற்றுமையை கொண்டு வர வேண்டும் என்று அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மலேசியாவின் பன்முகத்தன்மையை தொடர்ந்து கொண்டாடுவதுடன், சமூக ஒற்றுமையை வலுப்படுத்தி அனைத்து மலேசியர்களிடையிலும் மகிழ்ச்சியைப் பரப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஒற்றுமையின் முக்கியத்துவத்தை ஓணம் நமக்கு உணர்த்துகிறது என்று குறிப்பிட்ட லோகா பாலா மோகன், பொருளாதார சவால்கள் மற்றும் கடினமான சூழ்நிலைகளை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்றார். ஒருவருக்கொருவர் உதவிக்கரம் நீட்டி, அனைவரும் இணைந்து முன்னேறவும் செழிக்கவும் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இறைவன் அனைவரையும் அன்பு, மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பால் ஆசீர்வதிக்க வேண்டும் என்று பிரார்த்தித்த அவர், மலையாள சமூகத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் தனது ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

Scroll to Top