நேபாளம், 27 ஆகஸ்ட் 2026 : நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் உள்ள போதே கோசி ஆற்றில் ஏற்பட்ட இந்தப் பெருவெள்ளம், வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் மின்சார கட்டமைப்புகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பனிப்பாறை மற்றும் பாறைகள் சரிந்து ஆற்றில் விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளமே பேரழிவுக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் காணாமல் போயுள்ளனர். அவர்களில் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்புப் பணிகளில் நேபாள ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். மோசமான வானிலை மற்றும் சாலை, பாலங்கள் சேதமடைந்துள்ளதால் தொலைதூர பகுதிகளை சென்றடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உதவும் வகையில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களைப் பெறவும், அவசர உதவி தேவைப்படுவோர் தொடர்புகொள்ளவும் இந்த உதவி எண்களைப் பயன்படுத்தலாம்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.







