09 ஜூலை 2026 : மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் நெருக்கடியின் தாக்கம் காரணமாக, 2026ஆம் ஆண்டுக்கான உலக பொருளாதார வளர்ச்சி குறித்த தனது கணிப்பை சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்.) 3.1 விழுக்காட்டில் இருந்து 3.0 விழுக்காடாகக் குறைத்துள்ளது.
ஐ.எம்.எஃப். வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இந்தக் கணிப்பு அமெரிக்கா–ஈரான் இடையேயான அண்மைய மோதலுக்கு முன்பே தயாரிக்கப்பட்டதாகும். இருப்பினும், மேற்கு ஆசியாவில் நீடிக்கும் போர் மற்றும் புவிசார் அரசியல் பதற்றம் உலக பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து சவாலாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.எம்.எஃப். ஆராய்ச்சித் துறையின் தலைவர் டெனிஸ் இகான் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு துறையின் வேகமான வளர்ச்சி உலக பொருளாதாரத்திற்கு ஆதரவாக இருந்தாலும், மேற்கு ஆசியப் போர் ஏற்படுத்திய பாதிப்பை முழுமையாக ஈடுசெய்ய முடியவில்லை என்றார். மேலும், உலகளாவிய பணவீக்கம் இந்த ஆண்டு 4.7 விழுக்காடாக அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் வளர்ச்சி காரணமாக 2027ஆம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 3.4 விழுக்காடாக மீளும் என ஐ.எம்.எஃப். நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அதேவேளையில், போர் நீடித்தால், எரிசக்தி விலை உயர்வு மற்றும் பணவீக்க அழுத்தம் உலக பொருளாதாரத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.






