ஜம்மு – காஷ்மீர் வெள்ளப்பெருக்கு: புதுவை அரசு ரூ.1கோடி நிவாரணத்தொகை அறிவிப்பு.

ஜம்மு – காஷ்மீர் வெள்ளப்பெருக்கு: புதுவை அரசு ரூ.1கோடி நிவாரணத்தொகை அறிவிப்பு.

12

ஜம்மு – காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையின் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் சேதமடைந்து 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர்  பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ. 6,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுச்சேரி அரசு சார்பில் ரூ. ஒரு கோடி நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அறிவித்தார்.