என் தமிழ்

தேசிய விளையாட்டு வீரர் விருது 2025 : பேட்மிண்டன் வீரர் சென் டாங் ஜியே கௌரவிப்பு

கோலாலம்பூர், 19 மே 2026 : மலேசிய தேசிய விளையாட்டு விருதுகள் 2025 (Anugerah Sukan Negara 2025) நிகழ்வில், தேசிய பேட்மிண்டன் வீரர் சென் டாங் ஜீ ‘தேசிய விளையாட்டு வீரர்’ (Olahragawan Kebangsaan) விருதைப் பெற்று கௌரவிக்கப்பட்டார்.

நாட்டின் விளையாட்டுத் துறையில் சிறப்பான சாதனைகளைப் பதிவு செய்ததற்காக வழங்கப்பட்ட இந்த உயரிய விருது, சென் டாங் ஜியேவின் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் தொடர்ச்சியான வெற்றிகளுக்கான அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. தேசிய பேட்மிண்டன் அணிக்காக பல்வேறு சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் அவர், மலேசிய விளையாட்டுலகின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

இவ்விருது வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, விளையாட்டு ரசிகர்கள் மற்றும் தேசிய விளையாட்டு அமைப்புகள் அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளன.

“Rise2Win” மற்றும் “Champions Rising” என்ற முழக்கங்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வு, நாட்டின் சிறந்த விளையாட்டு வீரர்களின் சாதனைகளை கொண்டாடும் முக்கிய தேசிய மேடையாக அமைந்தது.

Scroll to Top