ஈராக்கில் வெடிகுண்டு வெடித்து 32 பேர் பலி!

ஈராக்கில் வெடிகுண்டு வெடித்து 32 பேர் பலி!

1

போலீஸ் சோதனைச்சாவடி மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மோதி வெடிக்கச்செய்தனர். இதில் 5 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதேபோல், மற்றொரு சந்தையில் கார் குண்டு வெடித்ததில் 14 பேர் உயிரிழந்தனர். 35 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் பல கார்கள் சேதம் அடைந்தன.ஹாதீர் மாவட்டத்தில் போலீஸ் சோதனைச்சாவடி மீது தற்கொலைப்படை தீவிரவாதி காரை மோதி வெடிக்கச்செய்ததில் 8 போலீஸ் அதிகாரிகள், 2 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பாக்தாத்தில் பயணிகள் சென்ற மினிபஸ்சில் குண்டுவெடித்ததில் 3 பயணிகள் உயிரிழந்தனர். இவ்வாறு ஒரேநாளில் நடந்த தாக்குதலில் 32 பேர் இறந்தனர்.