15 மே 2026 : பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி, ஹார்மூஸ் ஜலசந்தி அனைத்து வர்த்தக கப்பல்களுக்கும் திறந்தே இருப்பதாக அறிவித்துள்ளார். எனினும், அந்த வழியாகச் செல்லும் கப்பல்கள் ஈரான் கடற்படையுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய பதற்றங்களால் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் சிக்கல்கள் உருவாகியுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், ஈரான் எந்த தடையையும் உருவாக்கவில்லை என்றும் கூறினார்.
அமெரிக்கா மேற்கொண்டுள்ள முற்றுகை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளே தற்போதைய நெருக்கடியின் முக்கிய காரணம் எனவும், அவை நீக்கப்பட்டால் நிலைமை சீராகும் எனவும் அராக்சி குறிப்பிட்டார்.
உலகின் முக்கிய எண்ணெய் மற்றும் வர்த்தகக் கடல்வழிப் பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹார்மூஸ் ஜலசந்தி, சமீப காலங்களில் ஏற்பட்ட புவிசார் அரசியல் பதற்றங்களால் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.





