கோலாலம்பூர், 14 ஏப்ரல் 2026 : மருந்துகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. நோய் மேலும் தீவிரமடைவதைத் தடுப்பதற்கு, ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவதும் இதில் அடங்கும் என பொது சுகாதார மருத்துவர் டத்தோ டாக்டர் ஜைனல் அரிஃபின் ஓமர் கூறினார்.
“மக்கள் தங்கள் உடல் நலனைப் பேணுவதன் மூலம் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். நோய் நாள்பட்டதாக மாறும் வரை காத்திருக்க வேண்டாம், ஏனெனில் அது மருந்துகளின் தேவையை அதிகரித்துவிடும்,” என்று அவர் RTM-மிடம் கூறினார்.
இதற்கிடையில், மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் (UKM) பொது சுகாதார நிபுணரான பேராசிரியர் டாக்டர் ஷரிஃபா எசாத் வான் புத்தே, பொதுமக்கள் பீதியுடன் மருந்துகளை வாங்கத் தேவையில்லை என்று வலியுறுத்தினார். அளவுக்கு அதிகமான கொள்முதல், சந்தையில் வழங்கல் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும். “ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு காலாவதி தேதி உண்டு, அதை நீண்ட காலம் சேமித்து வைப்பது உகந்தது அல்ல. ஒருவரின் உடல்நலத் தேவைகளும் அவ்வப்போது மாறக்கூடும்,” என்று அவர் கூறினார்.





