சித்தார்த் நடிக்கும் எனக்குள் ஒருவன் பட விழாவில் சமந்தா

சித்தார்த் நடிக்கும் எனக்குள் ஒருவன் பட விழாவில் சமந்தா

Jabardasth

பாய்ஸ் படத்தில் அறிமுகமான சித்தார்த் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்த அவர், ஸ்ருதிஹாசன் உட்பட பல நடிகைகளுடன் நெருக்கமாக இருந்தார். எனவே சித்தார்த் உடன் இணைத்து பல நடிகைகளின் பெயர் கிசுகிசுக்கப்பட்டன. காலப்போக்கி அந்த கிசுகிசுக்கள் அனைத்தும் காலாவதியாகிவிட, கடைசியில் சமந்தா உடன் இணைத்து பேசப்பட்டார் சித்தார்த். அதை இருவருமே மறுக்கவில்லை. மாறாக, ஒரு கட்டத்தில் அந்த கிசுகிசுக்களை உண்மை என்று ஒப்புக்கொண்டதோடு, இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அறிவித்தனர். அதன் தொடர்ச்சியாய், இருவரது குடும்பத்தினரும் ஒன்றாக காளஹஸ்தி கோவிலுக்கு சென்று தோஷம் கழித்துவிட்டு வந்தனர்.

இப்படியாக போய்க்கொண்டிருந்த சித்தார்த் சமந்தா காதல்கதையில் திடீர் திருப்பமாக ஒரு செய்தி பரவியது. அதாவது இருவருக்கும் இடையில் சில மாதங்களாக பிரச்சனை ஏற்பட்டது என்றும் அதனால் பிரிந்துவிட்டார்கள் என்றும் சொல்லப்பட்டது.

அஞ்சான் படத்துக்கு நீச்சல் உடை அணிந்து படு கவர்ச்சியாக நடித்தார் சமந்தா. இதற்கும் கூட காதல் பிரிவுதான் காரணம் என்று சொல்லப்பட்டநிலையில், சித்தார்த் நடிக்கும் எனக்குள் ஒருவன் படத்தின் இசைவெளியீட்டுவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத்திலிருந்து பறந்து வந்தார் சமந்தா. இதன் மூலம் சித்தார்த் உடனான காதல் முறிந்துவிட்டது என்ற கிசுகிசுவை பொய்யாக்கிவிட்டார் சமந்தா.