என் தமிழ்

எரிபொருள் பற்றாக்குறை – BDR மற்றும் நடைபயணம் மேற்கொள்ள பூடான் மக்களுக்கு அறிவுரை

திம்பு, 02 ஏப்ரல் 2026 : மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்களால் விநியோகப் பற்றாக்குறை ஏற்பட்டு, பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுவதால் பூட்டானில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விலை உயர்வு தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்றும் அது விவரித்துள்ளது.

சுமார் 8 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட அந்த இமயமலை நாடு, நீர்மின் திட்டங்கள் மூலம் வருவாய் ஈட்டி, இந்தியாவிற்கு மின்சாரத்தையும் ஏற்றுமதி செய்தபோதிலும், இன்னமும் இந்தியா வழியாகவே எண்ணெயை இறக்குமதி செய்கிறது.

பொருட்கள் பற்றாக்குறையால் உள்ளூர் குடும்பங்களுக்கும் வணிகங்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஏஎஃப்பி அறிக்கை தெரிவிக்கிறது.

“எங்கள் அரசாங்கத்தின் மீது எந்தத் தவறும் இல்லை, அவர்கள் நிலைமையைக் கட்டுப்படுத்த தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தார்கள் — ஆனால் மேற்கு ஆசியாவில் போரும், இந்தியாவில் எண்ணெய் விலை உயர்வும் நிகழ்ந்துவிட்டன,” என்று அப்பகுதிவாசியான 40 வயது கர்மா கல்டன் விளக்கினார். பூட்டான் அரசாங்கம் புதன்கிழமை அன்று எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகளுடன் எரிபொருள் விலை உயர்வை அறிவித்தது. அதேவேளையில், குடும்பங்கள் மற்றும் பொருளாதாரம் மீதான தாக்கத்தைக் குறைப்பதற்காக, மார்ச் 21 அன்று அரசாங்கம் எரிபொருள் மானியங்களை அறிமுகப்படுத்தியது.

பிப்ரவரி 28 அன்று மத்திய கிழக்கில் போர் தொடங்கியதிலிருந்து, பெட்ரோல் விலை 60 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. முன்பு 65-95 நுல்ட்ரம்களாக இருந்த விலை, ஏப்ரல் 1 முதல் புதிய மானிய விலையான லிட்டருக்கு (0.69 டாலர் முதல் 1.04 டாலர் வரை) அதிகரித்துள்ளது.

Scroll to Top