இந்தியாவில் அல் குவைதா இயக்கத்தின் கிளை அமைப்பு: அய்மன் அல் ஜவஹிரி அறிவிப்பு

இந்தியாவில் அல் குவைதா இயக்கத்தின் கிளை அமைப்பு: அய்மன் அல் ஜவஹிரி அறிவிப்பு

alqaeda

இந்தியாவில் அல்-குவைதா அமைப்பின் கிளை அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைவராக உள்ள அய்மன் அல் ஜவஹிரி கூறியுள்ளார்.

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியும், ஜிகாத் கொடியும் ஏற்றிவைக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 55 நிமிடம் ஓடும் வீடியோ காட்சி அறிவிப்பு ஒன்றில், தலிபான் இயக்கத் தலைவரான முல்லா ஓமருக்கும் நன்றி தெரிவித்ததுடன் அவருடனான நீண்ட தொடர்பையும் ஜவஹிரி நீட்டித்துள்ளார்.

இந்தியாவில் செயல்படும் தங்கள் இயக்கம், இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியிலிருந்தும், ஒடுக்குமுறைக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று ஜவஹிரி கூறியுள்ளார். புதிதாக முளைத்துள்ள ஐ.எஸ். இயக்கத்தில் பல்வேறு நாடுகளில் உள்ள இளைஞர்கள் சேருவதை தடுக்கும் வகையிலும், தங்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கையை ஜவஹிரி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தான் மட்டுமே இஸ்லாமிய சமூகத்தின் தலைவர் என்று பறைசாற்றியுள்ள ஐ.எஸ். இயக்கத்தின் தலைவரான அபு அபு பக்ர் அல்-பாக்தாதிக்கு எதிராக தனது முதல் அடியை அல்-குவைதா எடுத்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.