கோத்த கினபாலு, 14 செப்டம்பர் 2025 : இங்குள்ள கம்போங் கோப்புங்கிட்டில் நேற்று முதல் ஏழு நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று சபா தீயணைப்பு செயல்பாட்டு மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறையின் ஆய்வில், கேள்விக்குரிய இடத்தில் மண் அமைப்பு நிலையற்றது என்றும், மழை தொடர்ந்தால் அடுத்தடுத்த நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் கண்டறியப்பட்டது” என்று இன்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, சம்பந்தப்பட்ட இரண்டு குடும்பங்களும் கம்போங் கோப்புங்கிட் சமூக மண்டபத்திற்கு செல்ல உத்தரவிடப்பட்டது.
கோத்தா கினபாலு தீயணைப்புத் துறை, ராயல் மலேசியன் காவல்துறை (PDRM) மற்றும் சபா கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறையுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.





