ஜோகூர், 19 ஜூன் 2025 : மலேசிய பிரதமரும், கேஅடிலான் கட்சித் தலைவருமான டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், ஜோகூர் மாநிலக் கேஅடிலான் தலைமைத்தினரும், அங்குள்ள அஸ்திவார போராளிகளும் இணைந்து முக்கியமான சந்திப்பொன்றை நடத்தினார்.
இந்த சந்திப்பில், எதிர்காலச் சவால்களை எதிர்கொள்வதற்காக கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பலத்தை ஒன்றிணைத்து, ஒற்றுமையை வலுப்படுத்தி, செயல் திட்டங்களை உறுதியுடன் முன்னெடுக்க வேண்டியதின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
“உயர்ந்த திடத்தன்மையும் தொடரும் போராட்ட உணர்வும் இருந்தால், ஜொகூர் மாநிலக் கேஅடிலான் குழு, மறுமாற்ற திட்டத்தையும் மலேசியா மடானிக் கொள்கையையும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் பொறுப்பை திறம்பட வகிக்க முடியும்” என்றார் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராகிம்.
இந்த சந்திப்பு, மாநிலக் கட்சியின் போராட்ட உன்னதத்தை மேலும் உறுதிப்படுத்தும் ஒரு வாய்ப்பாகவும், மக்கள் நம்பிக்கையை நிலைநாட்டும் முயற்சியாகவும் அமைந்தது.





