சிறந்த முடிவை எடுப்பேன் – நூருல் இஸா
கோலாலம்பூர், 07/05/2025 : கெஅடிலான் கட்சியின் தேர்தலில் தாம் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேண்டும் என்று கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களும் உயர்மட்ட தலைவர்களும் பரிந்துரை செய்திருப்பது தொடர்பில் அக்கட்சியின் உதவித் தலைவர் நூருல் இஸா அன்வார் சிறந்த முடிவை எடுக்கவிருக்கிறார்.
தாம் எடுக்கும் முடிவு, கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் உடன்பாடு, நட்பு, அர்த்தமுள்ள மாற்றம் மற்றும் சீர்திருத்தத்தைச் சமநிலைப்படுத்தும் என்று தாம் நம்புவதாக பினாங்கு மாநில தலைமைத்துவ மன்றம், எம்.பி.என் தலைவருமான நூருல் இஸா கூறினார்.
கெஅடிலான், தொடர்ந்து மலேசியர்களின் நம்பிக்கையைப் பெறும் அரசியல் கட்சியாக விளங்குவதற்குப் புது சுவாசத்தை அளிப்பதோடு, மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் நூருல் இஸா தமது முகநூலில் வலியுறுத்தினார்.
2025-2028-ஆம் தவணைக்கான கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இஸாவை வேட்பாளராக்க, நேற்று பல கிளைத் தலைவர்கள் தங்களின் வலுவான ஆதரவைத் தெரிவித்தனர்.
மற்றொரு நிலவரத்தில், கெஅடிலான் துணைத் தலைவர் பதவியைத் தாம் தொடர்ந்து தற்காத்துக் கொள்வதாக டத்தோ ஶ்ரீ ரஃபிசி ரம்லி இன்று உறுதிப்படுத்தினார்.
இம்மாத இறுதியில் நடைபெறும் கட்சியின் தேர்தலில் அப்பதவி போட்டியிடப்படுவதை தாம் வரவேற்பதாகவும் கூறினார்.
கட்சியின் இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கான போட்டி, தனிப்பட்ட உரிமை என்றும், அது ஜனநாயக உணர்வில் கொண்டாடப்பட வேண்டும் என்றும் பொருளாதார அமைச்சருமான ரஃபிசி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Source : Bernama
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews