சந்தைமலேசியா

பொருளாதார மீள்தன்மையை உருவாக்க இளைய தலைமுறையினர் சிறந்த அறிவாற்றலைப் பெற வேண்டும்

கோலாலம்பூர், 06/05/2025 : உலக சவால்களை எதிர்கொள்ளவதில் உள்நாட்டுப் பொருளாதார மீள்தன்மையை உருவாக்க, இளைய தலைமுறையினர் முந்தைய தலைமுறையினரை விட சிறந்த அறிவாற்றலைப் பெற வேண்டும்.

அந்நிய தொழில்நுட்பத்தை நம்பியிருந்தாலும், இளைஞர்கள் புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, வழங்கப்படும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

“மலேசியா முன்னேறவும் நம்பிக்கையுடனும் இருக்க விரும்பினால், அது வெளிதரப்பினரை மட்டும் சார்ந்திருக்கக்கூடாது. நாம் முதலில் உள்வலிமையை உருவாக்குகிறோம். இதை நாம் உள்நாட்டு பொருளாதார மீள்தன்மை என்று அழைக்கிறோம். அதைத்தான் நாம் செய்ய வேண்டும், நம்மால் முடிந்த அனைத்தையும். நாம் ஆரம்பக் கட்டத்திலேயே வெளிநாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும், புதிய வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். இது இளைஞர்களால் தீர்மானிக்கப்படுகிறது,” என்றார் அவர்.

இந்த அணுகுமுறை, மலேசியா பல்வேறு துறைகளிலும், தேவையான தொழில்நுட்பத்திலும் உள்ளூர் திறன்களை நம்பியிருக்க வழிவகுப்பதாக அவர் விளக்கினார்.

இன்று, கோலாலம்பூரில், நடைபெற்ற இ.சி.ஆர்.எல்- இன் செயல்பாடு மற்றும் பராமரிப்பு (ஓ&எம்) கட்டத்திற்கான, PLKI-ECRL வேலை வாய்ப்பும் அனுமதி கடிதமும் வழங்கும் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் உரையாற்றியபோது அவர் அவ்வாறு கூறினார்.

Source : Bernama

#PmAnwar
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews