எஸ்.பி.எம் முடிவுகளை மேம்படுத்த வியூக அணுகுமுறை மேற்கொள்ளப்படும்
காஜாங், 24/04/2025 : வரும் காலங்களில் எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளை மேம்படுத்த, பல முக்கியப் பிரிவுகளில் வியூக அணுகுமுறைகளை கல்வி அமைச்சு தொடர்ந்து மேற்கொள்ளும்.
தேர்வு எழுதுபவர்களின் வருகை விகிதமும் மலாய் மொழி மற்றும் வரலாறு பாடங்களுக்கான தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதும், கல்வி அமைச்சு அடையாளம் கண்ட பிரிவுகளில் அடங்கும் என்று அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
“இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், நாங்கள் தலையிடுவதால் அதை ஓரளவு குறைக்க முடியும். அதோடு, புறநகர் மற்றும் நகர்புறத்திற்கான இடைவெளியும் நெருங்கிய தொடர்புடைய நடவடிக்கைகளையும் இன்னும் கவனமாக காண முடியும். இந்த மாணவர்கள் மலாய் மொழி மற்றும் வரலாறு ஆகிய இரு பாடங்களுக்கும் சான்றிதழ்களைப் பெறத் தகுதியுடையவர்கள். இந்த ஆண்டு நாங்கள் வெற்றிப் பெற்றுள்ளோம். அதாவது சான்றிதழ் பெறத் தகுதியுடையவர்களும் அதிகரித்துள்ளனர். அதனால்தான், பல பிரிவுகளை மேம்படுத்த வேண்டியுள்ளது என்று நான் நினைக்கிறேன். மேலும், எதிர்கால முடிவுகளும் சிறப்பாக இருப்பதை உறுதி செய்ய சில விஷயங்களை நாங்கள் முக்கியமாக கருதுவோம்,” என்றார் அவர்.
இன்று வியாழக்கிழமை காஜாங், Convent (M) இடைநிலைப்பள்ளியில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டு எஸ்.பி.எம் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஃபட்லினா சிடேக் இதனைத் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு எஸ்.பி.எம் முடிவுகள், வரலாற்றில் சிறந்த முடிவுகளில் ஒன்றாக இருப்பது நாட்டின் கல்வி தரம் தற்போது அதிகரித்து வருவதை தெளிவாகக் காட்டுவதாக ஃபட்லினா குறிப்பிட்டார்.
Source : Bernama
#SPMResults
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews