நிலச்சரிவின் காரணமாக பள்ளி சுவர் இடிந்து விழுந்தது

நிலச்சரிவின் காரணமாக பள்ளி சுவர் இடிந்து விழுந்தது

கோலாலம்பூர், 23/04/2025 : இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவினால், கோலாலம்பூர் தாமான் துன் டாக்டர் இஸ்மாயில், தி.தி.டி.ஐ-யில் உள்ள அனைத்துலக பள்ளி ஒன்றின் சுவர் இடிந்து விழுந்தது.

காலை மணி 7.18-க்கு சம்பவம் குறித்து அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, தி.தி.டி.ஐ மற்றும் ஶ்ரீ ஹர்தாமாஸ் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் 3 இயந்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, தீயணைப்பு துறையின் இரண்டாவது நடவடிக்கை மூத்த அதிகாரி அஸ்கான் ஹம்தான் கூறினார்.

நிலச்சரிவின் காரணமாக சம்பந்தப்பட்ட பள்ளியின் சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

எனினும், பாதுகாப்பான சூழ்நிலையை உறுதிச் செய்யும் நடவடிக்கைகளைத் தீயணைப்பு உறுப்பினர்கள் விரைவுப்படுத்தியதாக அவர் கூறினார்.

சம்பவத்தில் உயிர் சேதங்கள் எதுவும் பதிவுச் செய்யப்படாத நிலையில், இரண்டு வாகனங்கள் மற்றும் வகுப்பறைகள், ஆசிரியர் அறை, கழிப்பறை, நூலகம் உள்ளிட்ட பள்ளி கட்டிடத்தின் சில பகுதிகள் சேதமடைந்தன.

மற்றொரு நிலவரத்தில், சிலாங்கூர் காஜாங், கம்போங் சுங்கை மெராப் லுவாரில் உள்ள ஜாலான் ஹஜி அப்துல்லாவுக்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால், அப்பகுதியின் சாலையைப் பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளதாக, சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

காலை 7.18 மணிக்கு சம்பவம் குறித்து அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து டெங்கில் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

Source : Bernama

#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews