இலக்கவியல் அனுமதி வில்லை அமல்படுத்தப்படும்
கோலாலம்பூர், 06/03/2025 : உள்துறை அமைச்சு வெளியிடும் பல்வேறு அனுமதிகளுக்கான வில்லைக்கு மட்டும் அரசாங்க நிதி உட்பட சுமார் ஒரு கோடியே 30 லட்சம் ரிங்கிட் செலவாகிறது.
எனவே, அச்செலவை தவிர்க்கும் வகையில் அந்த அனைத்து அனுமதி வில்லையையும், இலக்கவியல் மயமாக்கும் முன்னெடுப்பை அவ்வமைச்சு மேற்கொண்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
”நாங்கள் அதற்கு (இணைய விண்ணப்பம்) மாற தொடங்கிவிட்டோம். அனைத்து அனுமதி அட்டைகளுக்கும் இல்லை என்றாலும், முன்னணியில் உள்ள அனுமதி அட்டைகளுக்கு இணையம் வாயிலான விண்ணப்பத்தைத் தொடங்கியுள்ளோம். ஒரு அனுமதி அட்டை வெளியிடப்படும் போது அவர்களின் கடப்பிதழில் ஒரு வில்லை இருக்கும். இப்போது அது தேவையில்லை. ஏனெனில் அவர்களுக்கு ஒரு சாதனம் தேவை. அந்த அனுமதி அந்த சாதனத்தில் உள்ளது. பரிசோதனையின் நோக்கத்திற்காக அனைத்து குடிநுழைவு அதிகாரிகளுக்கும் மோசடியைத் தடுக்க ஒரு சாதன அமைப்பு உள்ளது”. என்றார் அவர்
இணையம் வாயிலாக மேற்கொள்ளப்படும் அனுமதி விண்ணப்பங்களின் வழி, சேவை முகப்புகளில் 70 விழுக்காடு வரையிலான நெரிசலை குறைக்க முடிவதாக அவர் மேலும் கூறினார்.
வேலைக்கான தற்காலிக பயண அட்டை, மாணவர் அட்டை மற்றும் வாழ்க்கை துணை அட்டைகளே அதிகம் விண்ணப்பிக்கப்படும் நிலையில், மலேசிய குடிநுழைவுத் துறை,உடன் இணைந்து ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் அனுமதி அட்டைகளை அமைச்சு வெளியிடுகிறது.
Source : Bernama
#Digitalisation
#DigitalIDCards
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews