கோலாலம்பூர், 06/03/2025 : சுற்றுச்சூழல் குற்றங்களைக் களைவதற்கான முயற்சிகளை வலுப்படுத்த, 1974-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டம், AKAS-சின் அதிகாரங்களை அரச மலேசிய போலீஸ் படைக்கு வழங்குவது குறித்து, இயற்கை வளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சு, NRES பரிசீலித்து வருகிறது.
சுற்றுச்சூழல் குற்றங்களை, 2001-ஆம் ஆண்டு கள்ளப் பண பரிமாற்றம் சட்டம், அம்லா மற்றும் 1959-ஆம் ஆண்டு குற்றச்செயல் தடுப்பு சட்டம், POCA-வின் கீழ் வைப்பதும், பரிந்துரைகளில் இடம் பெற்றுள்ளதாக அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் தெரிவித்தார்.
2015-ஆம் ஆண்டு முதல், 2023-ஆம் ஆண்டு வரையில், 7 லட்சத்து 64 ஆயிரத்து 453 மெட்ரிக் டன், உள்நாட்டு மின் மற்றும் மின்னணு கழிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
47 வளாகங்களில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான சோதனையின் விளைவாக, 15 ஆயிரத்து 764 மெட்ரிக் டன் மின்னணு கழிவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதன் மதிப்பு 5 கோடியே 50 லட்சம் ரிங்கிட் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
Source : Bernama
#PDRM
#AKAS
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews