என் தமிழ்

நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதிலும், வளர்ப்பதிலும் பொறுப்பு வகிப்பதை உறுதி செய்ய வேண்டும் : தியோ நீ சிங்

கோலாலம்பூர், 04/03/2025 : இன்று காலை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட ERA எப்.எம் வானொலி அறிவிப்பாளர்களின் காணொளியை உட்படுத்திய செயலுக்குத் தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங்  கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் வெளியிட்ட அறிக்கையின் படி, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் விரிவான விசாரணையை மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.

வானொலி நிலையங்கள் போன்ற ஊடகங்கள் நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதிலும், வளர்ப்பதிலும் பொறுப்பு வகிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தியோ நீ சிங் வலியுறுத்தினார்.

Source : Bernama

#EraFM
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Scroll to Top