மக்கள் குரல்மலேசியா

நவீன தொழிநுட்ப வளர்ச்சியில் இளைய சமுதாயம் தொடர்ந்து தடம் பதிக்க வேண்டும் தேசிய மணிமன்ற நாளில் முருகன் மணியம் வலியுறுத்தல்

பெட்டலிங் ஜெயா, 28/02/2025 : மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் 1-மார்ச்சு தேசிய அளவில் மணிமன்ற நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடிக்கொன்டு வருகிறோம். அவ்வகையில் தேசியப் பேரவையினர், மாநில, மாவட்ட, மன்ற உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள், முன்னோடிகள், வழிக்காட்டிகள் அனைவருக்கும் தேசியத் தலைவர் முருகன் மணியம் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்தார்.

தமிழ் இளைஞர் மணிமன்றம் மலேசியத் தமிழ் சமூகத்தில் முக்கிய பங்காற்றும் ஓர் இயக்கமாக செயல்பட்டு வருகின்றது. பல்வேறு போராட்டங்களையும் சமூக முன்னேற்ற நடவடிக்கைகளையும் முன்னெடுத்து, தமிழ் இளைஞர்களுக்கான உரிமைகளைப் பாதுகாக்க, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்த, பண்பாட்டு மற்றும் மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட்டு வந்த அமைப்பாக இது விளங்குகிறது.

“மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் வெறும் வரலாற்று அமைப்பு அல்ல, அது வாழ்வியல் சார்ந்த இயக்கம். இது பல திருப்புமுனைகளைக் கடந்தும், பல தலைவர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை உருவாக்கிய அமைப்பாகும். இன்றைய தலைமுறையும் தனது பணிகளைச் சிறப்பாக செய்து வருகின்றது. இளைஞர்கள் சமூகத்தின் தூண்களாக திகழ வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் கூறுகையில் தற்போது உலகம் நான்காம் தொழிற்புரட்சியின் (IR 4.0) பாதையில் பயணிக்கின்றது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளை இளைஞர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் செயற்கை நுண்ணறிவு (AI), நுண்ணிய கற்றல்(Deep Learning),இயந்திரவியல்(Robotics), தொழில் முனைவு (Entrepreneurship) போன்ற நவீன தொழில்நுட்பங்களை கற்று முன்னேற வேண்டும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு வாய்ப்பாக மட்டுமின்றி, சவாலாகவும் இருக்கிறது. அதனால், தமிழ் இளைஞர்கள் தொழில்நுட்பத்திற்குள் நுழைந்து, தங்கள் திறமைகளை அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்பம் மட்டுமல்லாது, வணிகம், நிர்வாகம், மருத்துவம், கல்வி, சட்டம், பண்பாட்டு வளர்ச்சி, விளையாட்டுபோன்ற துறைகளிலும் தமிழ் இளைஞர்கள் மலேசியாவில் முன்னிலை வகிக்க வேண்டும் என்றார். இது மட்டுமல்லாமல், தொழில் முனைவோராக (Start-up) தங்கள் சொந்த நிறுவனங்களைத் தொடங்குவதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்ப் பண்பாட்டின் வளர்ச்சி மற்றும் சமூக பங்குதொழில்நுட்ப வளர்ச்சியோடு சேர்ந்து, தமிழ் மொழி, பண்பாடு, இலக்கியம் மற்றும் கலை வளர்ச்சிக்கும் இளைஞர்கள் பங்களிக்க வேண்டும் என்றும் முருகன் மணியம் தெரிவித்தார். “தமிழ்ப்பண்பாட்டை பேணுவதற்கும், வளர்ப்பதற்கும், தமிழ் இலக்கியத்தை பாதுகாக்கவும், பரப்பவும் இளைஞர்கள் உறுதியாக முன்வர வேண்டும். மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் தொடர்ந்து இதற்காக செயல்பட்டு வருகிறது” என்றார்.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்புச் செய்யும் வகையில், இலக்கிய கருத்தரங்குகள், கவிதை, சிறுகதை, குறுங்கதை, கட்டுரை போட்டிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், தமிழ்ப்பள்ளிகளை ஆதரிக்கும் திட்டங்கள் போன்றவற்றை தமிழ் இளைஞர் மணிமன்றம் தொடர்ந்து செயல்பட்டுவருகிறோம் என்றார்.

“சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு.”

என்ற திருக்குறளின் கருத்துப்படி, தமிழ் இளைஞர்கள் தங்கள் அறிவை நல்லவற்றில் பயன்படுத்தி, வாழ்க்கையில் வெற்றி காண வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

மலேசியத் தமிழ் இளைஞர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு, புதிய காலத்திற்கேற்ப முன்னேற வேண்டும் என்பதற்காக மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் தொடர்ந்து அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று உறுதிபட தெரிவித்தார் தேசியத் தலைவர் முருகன் மணியம்.

– மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் வாழ்த்து செய்தி

#KelabBellBeliaTamil
#Murugan
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews