ம.இ.கா தேசிய மகளிர், இளைஞர், புத்ரா, புத்ரியின் 2024ஆம் ஆண்டு மாநாடு : டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் துவங்கி வைத்தார்

ம.இ.கா தேசிய மகளிர், இளைஞர், புத்ரா, புத்ரியின் 2024ஆம் ஆண்டு மாநாடு : டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் துவங்கி வைத்தார்

ம.இ.கா எனும் ஆலமரத்தின் கிளைகளாக இருக்கும், தேசிய மகளிர், இளைஞர், புத்ரா, புத்ரியின் 2024ஆம் ஆண்டிற்கான மாநாட்டை தலைமையேற்றுத் தொடக்கி வைத்தார் ம.இ.மா வின் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன்.

பதவியில் இருந்தாலும், இல்லை என்றாலும் மக்களின் பிரச்சனைகளுக்குச் செவி சாய்ப்பதும், குரல் கொடுப்பதும் ம.இ.கா என்பதை அனுபவப்பூர்வமாக மக்கள் இப்போது உணர்ந்திருப்பார்கள்.

நிகழ்காலப் பிரச்சனைகளையும், எதிர்காலச் சவால்களையும் நாம் உணர வேண்டும். ம.இ.காவில் நாம் விட்டுச் செல்லும் சரித்திரம் என்ன என்பதை நோக்கி ஒவ்வொருவரும் பயணிக்க வேண்டும். அப்படிப்பட்ட வழித்தடங்களை நாம் விட்டுச் செல்ல வேண்டும்.

‘சாதனை நமது கையிலே
சரித்திரம் படைப்போம் நாட்டிலே’ என தனது உரையில் டத்தோ ஸ்ரீ சரவணன் கூறினார்.