மும்பை மலாட் கட்டிட கட்டுமான இடத்தில் ஸ்லாப் இடிந்து விழுந்து மூன்று தொழிலாளிகள் இறந்த வழக்கில் 5 பேர் மீது வழக்கு

மும்பை மலாட் கட்டிட கட்டுமான இடத்தில் ஸ்லாப் இடிந்து விழுந்து மூன்று தொழிலாளிகள் இறந்த வழக்கில் 5 பேர் மீது வழக்கு

மும்பை (மகாராஷ்டிரா, இந்தியா), 06/09/2024 : மலாட் கட்டிட கட்டுமானத்தில் ஸ்லாப் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளிகள் இறந்த வழக்கில் கண்டிராக்டர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக டிண்டோஷி காவல் நிலையம் தெரிவித்துள்ளது.

பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 106(1) மற்றும் 125(A), 125(B) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ப்பட்டுள்ளது. இதுவரை யாரும் கைது செய்ப்படவில்லை என டிண்டோஷி காவல் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக வியாழக்கிழமை அன்று மகாராஷ்டிரா மலாட்டாவில் கட்டிடத்தின் 23வது மாடியில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது ஸ்லாப் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 தொழிலாளிகள் இறந்துவிட்டனர். மேலும் மூவருக்கு அடிபட்டுள்ளது. அடிபட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

Source : ANI