மத்திய பிரதேசம் அனுப்பூரில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக கைது

மத்திய பிரதேசம் அனுப்பூரில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக கைது

அனுப்பூர்(மத்திய பிரதேசம, இந்தியா), 06/09/2024 : மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மத்திய பிரதேச மாநிலத்தில் அனுப்பூர் மாவட்டத்தில் மால்கா வில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டு 05/09/2024 வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டார்.

ஷிவ் விஷால் நம்டியோ என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த ஆசிரியர் ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 23 வரை குறிப்பிட்ட அந்த பள்ளிக்கு பாடம் நடத்த வந்துள்ளார். பள்ளியின் ஆசிரியர் சகுந்தலா சிங் பயிற்சிக்காக போபால் சென்றிருந்ததால் இவர் தற்காலிகமாக மூன்று நாட்கள் இந்த பள்ளிக்கு பாடம் நடத்த வந்திருக்கிறார்.

ஒரு மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் சகுந்தலா விசாரனை நடத்தியதில் மேலும் 7-8 மாணவிகளும் அந்த குறிப்பிட்ட ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உறுதிபடுத்திய பின் மாணவிகளுடன் ராம்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அனுப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்(SP) மோட்டி உர் ரஹ்மான் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் ஷிவ் விஷால் நம்டியோ மீது பாரதிய நியார் சகிதா மற்றும் போஸ்கோ வின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவரது மொபைல் போனும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

Source : ANI