பணி நிறைவு பாராட்டு விழா MAJLIS PERSARAAN GURU BESAR SJKT CASTLEFIELD PN. K.KARPPAHAM

பணி நிறைவு பாராட்டு விழா MAJLIS PERSARAAN GURU BESAR SJKT CASTLEFIELD PN. K.KARPPAHAM

42 ஆண்டுகாலமாக கல்வித்துறையில் பணியாற்றி அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி கி.கற்பகம் அவர்களுக்கு கடந்த 02 ஆகஸ்டு 2024, பள்ளியில் பணி நிறைவு பாராட்டு விழா மிக விமரிசையாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்பட்டது. திருமதி கி.கற்பகம் அவர்கள் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியில் தனது ஆரம்பக்கல்வியைப் பயின்று அதே பள்ளியில் ஆசிரியராகவும், துணைத்தலைமையாசிரியராகவும் பணியாற்றி பிறகு தலைமையாசிரியராகப் பதவி ஏற்று பல பரிணாமங்களை தன் வசம் செய்தவர் என்பது பிரமிக்கத்தக்கவையாகும். கல்வித்துறையில் நீண்ட நெடிய பயணத்தில் தனது ஆறு வருட காலமாக காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியேற்று பல சாதனைகளைச் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தனது கல்விப்பணியையும் சமூகப் பணியினையும் நேர்த்தியாகவும் நனிச்சிறப்புடனும் செய்திருக்கிறார் என்பது வெள்ளிடைமலையாகும். காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் அவர்களுடன் இணைந்து பள்ளியின் ஆசிரியர் குழு சங்கமும் இந்த பணி நிறைவு பாராட்டு விழாவை மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் செய்ய தங்களது கரங்களை ஒன்றிணைந்து கடமையாற்றியுள்ளனர்.

தலைமையாசிரியர் திருமதி கி.கற்பகம் அவர்களின் பங்களிப்பு ஈடு செய்ய முடியாதது. அவர்களின் அர்ப்பணிப்பு அளவிட முடியாதது. அவர்களின் வழிகாட்டுதல் வார்த்தைகள் விலைமதிப்பற்றவை.
அவர்களின் அறிவும் பல வருட அனுபவமும் எங்களை உயர்த்திச் செல்லட்டும். பணி ஓய்வு நல்வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டு