ஆடிப்பெருக்கு:ஆடி மொய் விருந்து விழா புதுக்கோட்டை மாவட்டத்தில் களைகட்டியுள்ளது.

ஆடிப்பெருக்கு:ஆடி மொய் விருந்து விழா புதுக்கோட்டை மாவட்டத்தில் களைகட்டியுள்ளது.

Hindu Devotees Gather For The Maha Kumbh

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி பகுதியில் ஆடி மாதத்தில் நடைபெற்று வரும் மொய் விருந்து விழாவால் ஊரே களைகட்டியுள்ளது. இந்த மொய் விருந்துகளில் கோடிக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம், கொத்தமங்கலம், மேற்பனைக்காடு, குளமங்கலம், சேந்தன்குடி, மாங் காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் தஞ்சை மாவட்டத் தின் தெற்குப் பகுதியான பேரா வூரணி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடந்த 25 ஆண்டு களாக மொய் விருந்து என்ற பெயரில் கறி விருந்து அளித்து லட்சக்கணக்கிலான ரூபாய் மொய் வாங்குவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், ஆலங்குடியை அடுத்த வடகாட்டில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற தனியொரு வரது மொய் விருந்துக்கு ரூ.4.25 லட்சம் செலவில் சுமார் 850 கிலோ ஆட்டுக்கறி சமைத்து, விருந்து பரிமாறப்பட்டது. அவருக்கு சுமார் ரூ.2.5 கோடி மொய் வந்ததாக கூறப்படுகிறது.