எகிப்தில் இஸ்லாமிய போராளிகள் தாக்குதல்: இரு பழங்குடியின தலைவர்கள் படுகொலை

எகிப்தில் இஸ்லாமிய போராளிகள் தாக்குதல்: இரு பழங்குடியின தலைவர்கள் படுகொலை

egypt

எகிப்தில் உள்ள சினாய் தீபகற்பத்தின் வடக்கு பகுதியில் பழங்குடியின தலைவர்கள் இருவரை இஸ்லாமிய போராளிகள் படுகொலை செய்துள்ளனர்.

சினாய் தீபகற்பத்தின் பழங்குடியின பகுதியான சவார்கா பெடொயின்னில் வசித்து வந்த ஷேக் அஷ்டெவி மராஹில் மற்றும் ஹசன் அல் பெய்ரா ஆகிய இருவரும் சூரியன் மறையும் நேரத்தில் அங்குள்ள ரபாஹ் நகரில் நடந்த இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இருவரும் தங்களது வீட்டருகே முகமூடி அணிந்த நபர்களால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

போராளிகளுக்கு எதிராக எகிப்து ராணுவம் கடும் நடவடிக்கை எடுத்ததால், ஆத்திரமடைந்த அவர்கள் இத்தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது.