தமிழகத்திற்கு யார் முதலமைச்சர் என கடந்த சில தினங்களாக நடந்த குழப்பத்திற்கு ஒரு முடிவு வந்துவிட்டது. அ.இ.அ.தி.மு.க சசிகலா பிரிவு எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுத்த திரு .எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க மண்புமிகு தமிழக ஆளுநர்(பொறுப்பு) திரு. வித்யாசர் ராவ் அவர்கள் இன்று அழைப்பு விடுத்திருக்கிறார். இன்று 16-02-2017 மாலை 4.30 மணிக்கு திரு. எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்கிறார். அதை தொடர்ந்து அடுத்த 15 நாட்களில் சட்டசபையில் அவர் தனது பெறும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.






