வெள்ள நிவாரண பணிகளில் 50 நடிகர்-நடிகைகள்

Online-Tamil-News-Malaysia

Online-Tamil-News-Malaysia

டிசம்பர் 10, சென்னையை புரட்டிப்போட்ட மழை வெள்ளத்தால் வீடுகள், உடமைகளை இழந்து லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளில் அரசும், தன்னார்வ தொண்டு அமைப்புகளும் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன.  நடிகர்-நடிகைகளும் படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு நிவாரண நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார்கள்.  இடுப்பளவு வெள்ளத்தில் நடந்து சென்றும் படகுகளில் பயணம் செய்தும் வீடுவீடாக உணவு, துணிமணிகள், மருந்து பொருட்கள் போன்றவற்றை விநியோகித்து வருகிறார்கள்.  நாசர், விஷால், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, ஆர்யா, பார்த்திபன், தனுஷ், பொன்வண்ணன், சித்தார்த், எஸ்.வி.சேகர், ரமணா, சாந்தனு, மயில்சாமி, மோகன், உதயா, அஜய் ரத்னம், ஸ்ரீமன், பசுபதி, பிரேம், மனோபாலா, இமான் அண்ணாச்சி, ஆரி, ரோகினி, சுஹாசினி, வரலட்சுமி, மோகினி, கோவை சரளா உள்பட 50 நடிகர்-நடிகைகள் இந்த நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.