இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருக்கும் 300 தீவிரவாதிகள்

Online Tamil News Malaysia

Online Tamil News Malaysia

நவம்பர் 4, காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு நெடுகிலும் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் இருவர் இறந்தனர். காஷ்மீரில் பனிப்பொழிவு தொடங்கும் முன் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யவே பாகிஸ்தான் இந்த அத்துமீறலில் ஈடுபடுகிறது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அப்பால் உள்ள பாகிஸ்தான் ஏவு தளங்களில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ காத்துள்ளனர். குளிர் காலத்துக்கு முன்பாக ஊடுருவு மாறு அவர்களுக்கு நிர்ப்பந்தம் அளிக்கப்படுகிறது.

ஊடுருவலுக்கு எதிரான வலுவான கட்டமைப்பை நாம் ஏற்படுத்தியுள்ளதால் தீவிரவாதிகளின் முயற்சி தோல்வியில் முடிகிறது. எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளனர் என்றார்.