சக பயணிகளை கத்தியால் குத்தியவரை சுட்டு தள்ளிய போலீசார்

சக பயணிகளை கத்தியால் குத்தியவரை சுட்டு தள்ளிய போலீசார்

knife

மார்ச் 7, சீன தலைநகர் பீஜிங் அருகே உள்ள ரெயில் நிலையத்தில் 9 பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்தியவரை சீன காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். மற்றொருவர் கைது செய்யப்பட்டார்.இதுபற்றி அந்நாட்டு காவல்துதறையினர் கூறுகையில், மர்ம நபர் ஒருவர் இரயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகளை கத்தியால் சரமாரியாக குத்தியதாகவும், இதில் பலர் காயம் அடைந்ததாகவும் தெரிவித்தார். பின்னர் அந்த மர்ம நபர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என அவர் தெரிவித்தார். இச்சம்பவம் பற்றி கூடுதல் தகவல்களை தர காவல்துறையினர் மறுத்துவிட்டனர். கத்திக்குத்துக்குள்ளான பயணிகள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.