பாகிஸ்தானில் 15 தீவிரவாதிகள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் 15 தீவிரவாதிகள் உயிரிழப்பு

Tehrik-e-taliban-620x465

பிப்ரவரி 16, குர்ரம் ஏஜென்சி பகுதியில், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள சோதனைச்சாவடி மீது நேற்று அதிகாலையில் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.

பாகிஸ்தான் ராணுவம் இதற்கு தக்க பதிலடி தரும் வகையில், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மற்ற தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் பகுதிக்குள் தப்பி ஓடி விட்டனர்.

இந்த மோதலில் ஒரு ராணுவ வீரர் காயம் அடைந்தார்.