மனிதாபிமானம் மிகுந்த ஹீரோயின்கள்

மனிதாபிமானம் மிகுந்த ஹீரோயின்கள்

s5

நவம்பர் 27, நடிப்பைத் தொடர்ந்து ஓவியம் வரைவதிலும் ஹன்சிகா கைதேர்ந்தவர். இதுவரை வரைந்த ஓவியங்களைத் திரட்டி மும்பையில் கண்காட்சி நடத்தினார். ஒரு ஓவியம் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையானது. அதை மும்பையிலுள்ள அனாதை இல்லத்துக்கு கொடுத்து விட்டார். இதையடுத்து மீண்டும் கண்காட்சி நடத்த உள்ளார்.

அதற்காக, ஷூட்டிங் இல்லாத ஓய்வு நேரங்களில் ஓவியம் வரைகிறார். இதில் திரட்டப்படும் நிதியை மூலதனமாக வைத்து, மும்பையில் முதியோர் இல்லம் கட்டப்போவதாக அறிவித்துள்ளார்.

ஹன்சிகாவைப் போல் ஸ்ரேயாவும் ஓவியம் வரையும் திறமை பெற்றுள்ளார். ‘ஹூட் ஹூட்’ புயல் தாக்கியதில் விசாகப்பட்டினம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்காக தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர், நடிகைகள் நிதியுதவி வழங்கினர்.

அதற்கு உதவும் வகையில் ஸ்ரேயா தன் ஓவியத் திறமையைப் பயன்படுத்த உள்ளார். கிருஷ்ணர், புத்தர் ஆகிய ஓவியங்களை வரைந்துள்ள அவர், இம்மாத இறுதியில் அதை ஏலம் விடுகிறார். அதில் வரும் தொகையை, புயல் நிவாரண நிதிக்கு வழங்குகிறார்.