பூங்காவில் சிறுமியை கடித்து கொன்ற புலி

பூங்காவில் சிறுமியை கடித்து கொன்ற புலி

d

நவம்பர் 4, பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள புலி ஒன்று கடித்ததில், 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். தென்மேற்கு சீனாவில் உள்ள சோன்கிங் நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றுக்கு கடந்த வெள்ளிக் கிழமையன்று, 8 வயது சிறுமி தனது பெற்றோருடன் சென்றிருந் தாள். பொழுதுபோக்கு பூங்காவில் நடைபெறும் சர்க்கஸ் நிகழ்ச்சிக் காக விலங்குகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் பகுதிக்கு சென்ற சிறுமி அங்கிருந்த விலங்குகள், பறவைகளை ரசித்து கொண்டிருந்தாள். இந்நிலையில், புலியை பாதுகாத்து வைத்திருக்கும் இடத்துக்கு சென்றபோது, சிறுமி தவறி புலிக்கு அருகே விழுந்து விட்டாள். சிறுமியை புலி கடித்து குதறியது.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பூங்கா ஊழியர்கள் ஓடிவந்து, புலியிடம் இருந்து சிறுமியை மீட்டனர். படுகாயம் அடைந்த சிறுமியை அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். சிறுமியை புலி கடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.