ஈரானில் விமானம் விழுந்து விபத்து: போலீஸ் அதிகாரிகள் உள்பட 7 பேர் பலி

ஈரானில் விமானம் விழுந்து விபத்து: போலீஸ் அதிகாரிகள் உள்பட 7 பேர் பலி

iran-topper

ஈரானில் சிஸ்டான் பலுசிஸ்தான் மாகாணத்தில் போலீசார் மீது நடந்த தாக்குதலில் 4 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நேற்று முன்தினம் ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து சிஸ்டான் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான ஜெஹாதன் நோக்கி 4 போலீஸ் அதிகாரிகள் ஒரு சிறிய ரக விமானத்தில் சென்றனர். இந்த விமானத்தில் விமானி உள்பட 3 பேர் சிப்பந்திகள்.

இந்த விமானம் எதிர்பாராத விதமாக ஜெஹாதனுக்கு வெளியே மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 7 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. ஈரான் விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதும், கடந்த 14 ஆண்டுகளில் 22 விபத்துக்கள் நேரிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்டு மாதம் ஈரானின் செபஹான் பயணிகள் விமானம், விபத்துக்குள்ளானதில் 39 பேர் பலியானது நினைவு கூரத்தக்கது.