நேபாளம், 03 செப்டம்பர் 2026 : நேபாளத்தில் தொடர்ந்து ஏற்பட்ட கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,243 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்குள் வெள்ளநீர் புகுந்ததுடன், சாலைகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நேபாளத்தின் பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.







