என் தமிழ்

ஊழல் தடுப்பு : புதிய JKMR, LPPR உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கிய பிரதமர்

கோலாலம்பூர், 30 ஜூன் 2026 : மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், மாமன்னரின் ஒப்புதலைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஊழல் தொடர்பான சிறப்புக் குழு (JKMR) மற்றும் ஊழல் தடுப்பு ஆலோசனை வாரியம் (LPPR) ஆகியவற்றின் புதிய உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதில் JKMR மற்றும் LPPR ஆகியவை சுயாதீனமான கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கும் முக்கியமான கண்காணிப்பு அமைப்புகளாகச் செயல்படுகின்றன என்றார். புதிய உறுப்பினர்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நாட்டின் நலனுக்காக ஊழலை ஒழிக்கும் ஒரே நோக்கத்துடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஊழலை எதிர்க்கும் பணியை ஒரு நிறுவனம் மட்டும் மேற்கொள்ள முடியாது என்றும், அமலாக்க அமைப்புகள், ஆலோசனை அமைப்புகள், நாடாளுமன்றம், அரசு மற்றும் தனியார் துறைகள், அதேபோல் பொதுமக்கள் ஆகியோரின் நெருங்கிய ஒத்துழைப்பே ஊழல் தடுப்பு முயற்சிகளின் வெற்றிக்கு அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Scroll to Top