அமரகாவியம் படத்தை பார்க்க நடிகர் சிம்பு நயன்தாரா ஜோடியாக வந்தனர்.

அமரகாவியம் படத்தை பார்க்க நடிகர் சிம்பு நயன்தாரா ஜோடியாக வந்தனர்.

Idhu

காதல் கதை அம்சம்கொண்ட படத்தை பார்க்க சிம்பு-நயன்தாரா ஜோடி சேர்ந்தனர்.நடிகர் ஆர்யா தயாரிக்க அவரது தம்பி சத்யா ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘அமரகாவியம். மியா ஹீரோயின். ஜீவாசங்கர் இயக்கம். இப்படத்தின் முன்னோட்ட காட்சியை சமீபத்தில் தனது சக சினிமா நண்பர்கள், தோழிகளுக்கு திரையிட்டார் ஆர்யா. அதை ஏற்று நடிகர் சிம்பு, நயன்தாரா ஜோடியாக வந்தனர். இருவரும் ஒரே காரில் வரவில்லையென்றாலும் அரங்கிற்கு வந்ததும் ஜோடியாக நின்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். அதேபோல் காதல் கிசுகிசுவில் சிக்கி இருக்கும் விஷால், வரலட்சுமியும் இப்படத்தை பார்க்க வந்தனர். மேலும் டைரக்டர் பாலா, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா, நடிகைகள் சோனியா அகர்வால், ஜனனி ஐயர், லேகா வாஷிங்டன் உள்ளிட்டோர் வந்தனர். இப்படத்தை ஏற்கனவே நயன்தாராவுக்காக ஆர்யா திரையிட்டு காட்டினார். படத்தை பார்த்துவிட்டு கண்ணீர் விட்டு அழுத நயன்தாரா யாரிடமும் பேசாமல் வீட்டுக்கு சென்றார். பின்னர்தான் இயக்குனருக்கும், ஆர்யாவுக்கும் போன் செய்து தனது கருத்தை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.