கோலாலம்பூர், 18/06/ 2025 : இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் இணைந்து, க்ஷேத்திர அகாடமி தனது 33வது ஆண்டு நிறைவையொட்டி ‘ஆனந்த நடன பிரகாசம்’ என்ற தலைப்பில் வருடாந்திர நிர்தியோத்சஷ் நடன நிகழ்ச்சியை கோலாலம்பூரில் உள்ள டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸில் ஏற்பாடு செய்தது.
இந்த நிகழ்ச்சியில் அகாடமியின் மாணவிகள் மற்றும் அழகிய நடனத்திறமை கொண்ட கலைஞர்கள் பாரம்பரிய இந்திய நடனங்களை நயமிகுந்த வகையில் வழங்கினர்.
இந்திய துணை உயர்ஸ்தானிகர் திருமதி சுபாஷினி நாராயணன் தலைமை தாங்கி நிகழ்வில் பங்கேற்று, மலேசியாவில் இந்திய பாரம்பரிய கலைகளுக்காக முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றிவரும் க்ஷேத்திர அகாடமி இயக்குநர் திருமதி அப்சரா ராம்கோபால் அவர்களை சிறப்பு வாழ்த்துக்களுடன் பாராட்டினார்.
இந்த நிகழ்வு, இந்தியா–மலேசியா இடையிலான கலாசார உறவுகளை வலுப்படுத்துவதோடு, மலேசியா வாழ் இந்திய வம்சாவளியினரின் கலைப் பங்களிப்பையும் முன்னிறுத்தியது.





