என் தமிழ்

ASAS திட்டத்தின் வடக்கு மண்டலம் B-இன் நிறைவு விழாவில் ஃபாஹ்மி ஃபட்ஸில் கலந்துகொண்டார்

பேராக், 15/06/2025 : மலேசிய தகவல் தொடர்புதுறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபட்ஸில் அவர்கள், லுமுட், பேராக் UniKL-MIMET, வளாகத்தில் இன்று நடைபெற்ற அடிப்படை தகவல் அகாடமி (ASAS) திட்டத்தின் வடக்கு மண்டலம் B-இன் நிறைவு விழாவில் கலந்துகொண்டார்.

“பயிற்சியாளர்களுக்கான பயிற்சி” (Training of Trainers) என்ற மையக்கருவை அடிப்படையாகக் கொண்ட இந்த திட்டம், Komuniti MADANI உறுப்பினர்களை, தங்களது சமூகங்களில் முக்கிய கருத்து வழிகாட்டிகளாக (Key Opinion Leaders) மாற்றும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.

ASAS திட்டத்தின் வழியாக, சமகாலச் சிக்கல்களை தெளிவாகவும், தரவுகளுடன் கூடிய விளக்கத்துடன், சமூக ஊடகங்கள் வழியாக பரப்பும் திறமைகளை ஊக்குவிக்கின்றது. இது, நாட்டின் உருமாறிவரும் தகவல் தொடர்பு சூழலுக்கு ஏற்ப, பொதுமக்களுடன் திறந்த மற்றும் உண்மையான தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் முன்நோக்கி செல்கிறது.
டத்தோ ஃபாஹ்மி ஃபட்ஸில், தனது உரையில், “Malaysia MADANI என்பது ஒரே முறையில் வளர்ச்சியையும், ஒற்றுமையையும் பேணும் செயல்திட்டம். ASAS போன்ற திட்டங்கள் அதன் செயல்பாடுகளுக்குப் பின்புலமாக இருக்கின்றன,” என்றார்.

இந்த நிகழ்வு, விசுவாசம் “Taat Setia” என்ற விழுமியத்துடன், தேசிய ஒற்றுமைக்கும் தகவல் தெளிவுக்கும் வலுவூட்டும் முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.

Scroll to Top