கோலாலம்பூர், 11/06/2025 : கண்ணதாசன் அறவாரியம் ஏற்பாட்டில், கண்ணதாசன் விழா 2025 29/06/2025 அன்று நடைபெறுகிறது
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை..
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை..
– கண்ணதாசன்
மலேசியா கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின் தலைமையில் கண்ணதாசன் விழா 2025 29/06/2025 அன்று கோலாலம்பூரில் உள்ள செட்டியார் மண்டபத்தில் நடைபெறுகிறது
தமிழகப் பேச்சாளர் தாமல் கோ.சரவணன் அவர்களின் சிறப்புரையுடன், காலத்தை வென்ற கவியரசு கண்ணதாசன் அவர்கள் விட்டுச்சென்ற இலக்கியங்களைக் கேட்பதும், பார்ப்பதும், இரசிப்பதும் நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம். தமிழ் அமுதம் பருக தமிழன்பர்களும் இலக்கியப் பிரியர்களும் திரண்டு வருக.





