மருந்துகளின் விலையைக் காட்சிப்படுத்தும் அமலாக்கம்; மூன்று மாதங்களுக்கு அபராதம் விதிக்கப்படாது
புத்ராஜெயா , 02/05/2025 : கல்வி அமலாக்கத்தின் மூன்று மாத காலத்திற்குள் மருந்து விலைகளைக் காட்சிப்படுத்த தவறும் தனியார் சுகாதார மையங்களுக்கு அபராதம் அல்லது அறிவிக்கைகளை விதிக்க சுகாதார அமைச்சு எண்ணம் கொண்டிருக்கவில்லை.
மாறாக, மருந்து விலை காட்சிப்படுத்துதலுக்கான 2025-ஆம் ஆண்டு விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாப எதிர்ப்பு உத்தரவு, அனைத்து தரப்பினரும் உத்தரவு குறித்து தெளிவாக இருப்பதற்காக கல்வி அமலாக்கத்தில் அதிக கவனம் செலுத்தும் என்று மருந்தக சேவை பிரிவின் சுகாதார துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் அசுவானா ரம்லி தெரிவித்தார்.
“இந்த மூன்று மாதங்களுக்கு எந்த அபராதமும் விதிக்கும் திட்டம் இல்லை. கல்வி அமலாக்கத்தில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த உத்தரவுகளை செயல்படுத்துபவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை கண்காணிக்கும் நேரம் இதுவாகும்,” என்றார் அவர்.
இன்று, புத்ராஜெயாவின் மருத்து விலையை வெளிப்படுத்தும் முயற்சி குறித்த விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.
மே முதலாம் தேதி தொடங்கி அனைத்து மருத்துவமனை மற்றும் சமூக மருந்தக வளாகங்களும் தங்களது தளங்களில் விற்கப்படும் மருந்துகளின் விலைகளை பயனீட்டாளர்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும்.
அனைத்து மருந்துகளும் தெளிவாக விலை அட்டை அல்லது விலைப் பட்டியலுடன் இருக்க வேண்டும் என்று மருந்து விலை காட்சிப்படுத்துதலுக்கான 2025-ஆம் ஆண்டு விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாப எதிர்ப்பு உத்தரவின்படி அமல்படுத்தப்பட்டது.
Source : Bernama
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews