நஜீப் வழக்கு; கூடுதல் ஆவண சமர்ப்பிப்பு தொடர்பிலான விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி
புத்ராஜெயா, 28/04/2025 : முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட வழக்கில் ஒரு கூடுதல் ஆவணம் இருப்பது தொடர்பில் மேல்முறையீடு செய்வதற்கான தேசிய சட்டத்துறைத் தலைவரின் விண்ணப்பத்திற்கு, கூட்டரசு நீதிமன்றம் இன்று அனுமதியளித்தது.
தேசிய சட்டத்துறைத் தலைவர் எழுப்பிய கேள்விகள், 1964-ஆம் ஆண்டு நீதிமன்ற நீதித்துறைச் சட்டம், செக்ஷன் 96-இன் கீழ் அங்கீகாரத்திற்கான வரம்பு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்துள்ளதாக மலாயா தலைமை நீதிபதி, டத்தோ ஶ்ரீ ஹஸ்னா முஹமட் ஹஷிம் தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிக் குழு ஒருமனதாக அம்முடிவை அறிவித்தது.
கூடுதல் ஆவணங்கள் தொடர்பான தேசிய சட்டத்துறைத் தலைவரின் மேல்முறையீட்டை விசாரிக்க ஜூலை முதலாம் தேதி தொடங்கி, இரண்டு நாட்களை கூட்டரசு நீதிமன்றம் நிர்ணயித்தது.
கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளான டத்தோ சபாரியா முஹமட் யூசோப் மற்றும் டத்தோ ஹனிஃபா ஃபரிகுலா ஆகியோருடன் இணைந்து டத்தோ ஶ்ரீ ஹஸ்னா அம்முடிவைச் செய்தார்.
இதற்கு முன்னர், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி, விண்ணப்பதாரரான தேசிய சட்டத்துறைத் தலைவர் விண்ணப்பம் ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார்.
கடந்த ஜனவரி ஆறாம் தேதி, 2-1 என்ற பெரும்பான்மை முடிவின் மூலம் வீட்டுக் காவலில் ஆறு ஆண்டு சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை அனுபவிக்க அனுமதிக்கும் கூடுதல் ஆவணங்கள் இருப்பதாக நஜிப் செய்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை, வழக்கின் தகுதியின் அடிப்படையில் விசாரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றத்திடம் ஒப்படைத்தது.
Source : Bernama
#Najib
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews